அப்போது இலங்கை அரசாங்கத்தின் புகையிரதம் என்றழைக்கப்பட்ட புகையிரத சேவைக்கு நாட்டின் அபிவிருத்தியுடன் இணைந்ததொரு சாதனமாக 1850 காலப்பகுதியில் தோற்றம் பெற்றது. இலங்கை புகையிரத பாதைக்கான முதலாவது மண் கட்டியானது‚ சேர் ஹென்ரி வோர்ட் ஆளுநரால் வெட்டப்பட்டது. அச்சம்பவம் 1858 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. பிரதான பாதை கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையில் கிழக்கிற்கு 54 கி.மீ. நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது புகையிரதம் 1864 திசெம்பர் மாதம் 27 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது. இந்த பாதையானது முதல் முதலில் 1865 ஒக்தோபர் மாதம் 02 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. தமது வலையமைப்பு முறைமையை விருத்தி செய்துகொண்ட புகையிரத சேவையானது 1927 ஆம் ஆண்டிலே 1530 கி.மீ. இனைக் கொண்ட முழு பயண வழியொன்றினை செயற்படுத்தியது. பிரதான வீதி 1867 ஆம் ஆண்டு கண்டி வரையும்‚ 1874 இல் நாவலப்பிட்டி வரையும்‚ 1885 ஆம் ஆண்டு நானு ஓய வரையும்‚ 1894 ஆம் ஆண்டு பண்டார வரையும்‚ 1924 ஆம் ஆண்டு பதுளை வரையும் கட்டம் கட்டமாக விஸ்தரிக்கப்பட்டது. ஏனைய புகையிரத பாதைகள் நாட்டின் ஏனைய பிரதேசங்களை இணைத்து பின்னர் பூரணப்படுத்தப்பட்டது. அதன்ப டி மாத்தளை பாதை 1880 ஆம் ஆண்டும்‚ கரையோரப் பாதை 1895 ஆம் ஆண்டும்‚ வடக்குப் பாதை 1905 ஆம் ஆண்டும்‚ மன்னார் பாதை 1914 ஆம் ஆண்டும்‚ களணி பாதை 1919 ஆம் ஆண்டும்‚ புத்தளம் பாதை 1926 ஆம் ஆண்டும்‚ மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பாதை 1928 ஆம் ஆண்டும் பூர்த்தி செய்யப்பட்டன.

ஆரம்பத்தில் புகையிரதமானது மலை நாட்டிலிருந்து தேயிலை மற்றும் கோப்பி போன்றவற்றை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டது. ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்ட இந்த உற்பத்திகள் நாட்டின் பிரதான வருமான வழியாகக் காணப்பட்டது. சனத் தொகை பெருக்கத்துடன் பயணிகள் போக்கு வரத்து அதிகரித்ததுடன்‚ 1960 தசாப்த காலப்பகுதியில் பிரதானமாக தொழில் முயற்சியின் அடிப்படையாக பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கை தோற்றம் பெற்றது. புகையிரதமானது தற்போது பிரதானமாக பயணிகள் போக்குவரத்தையே மேற்கொண்டு வருகிறது. முக்கியமான பயணிகள் போக்குவரத்து சேவையொன்றினை மேற்கொண்டுவரும் புகையிரதமானது நெடுஞ்சாலைகளின் நெரிசல்களையும் குறைத்து பயணிகளை கொழும்கும்‚ கொழும்பிலிருந்தும் கொண்டு செல்கின்றது.
 
     
     ரோலிங் ஸ்டொக் என்ஜின்    
 
முதலாவது ரோலிங் ஸ்டொக் என்ஜின் 1864 ஆம் ஆண்டு இலங்கையில் தரையிறக்கப்பட்டது. இந்த என்ஜின் 4-4-0 வகையிலான இரண்டு சில்லுகளையும் கொண்டுள்ளதுடன் 5 ன் எரிபொருள் தாங்கி மற்றும் 15‚200 கலன் தண்ணீர் தாங்கி கொள்ளளவினைக் கொண்ட “டென்டர்” ட்ரக் ஒன்றையும் கொண்டுள்ளது.

பபர் ஊடாக அதன் நீளம் 49 அடியாக அமைந்திருந்ததுடன் எடை 59 ன்களாகும். இந்த என்ஜினானது 1926 ஆம் ஆண்டு வரையில் பயன்படுத்தப்பட்டது. 1915 ஆம் ஆண்டிலே நீராவி மற்றும் நிலக்கரி பொயிலருடனான மூன்று சில்லு‚ நான்கு சில்லு லொக்கொமொட்டிவ் என்ஜின்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மலைநாட்டுப் பிரதேசங்களில் 4 இற்கு 1 சரிவுடைய வீதிகளில் புகையிரதத்தைக் தவதற்காக இரண்டாவது என்ஜினைப் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையில் கெரட் கிளாஸ் டபிள் ஹெடட் லொக்கொமொட்டிவ் என்ஜின்கள் 1928 ஆம் ண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. 1954 ஆம் ஆண்டு னட அரசு குதிரை வலு 1310 ஐக் கொண்ட ஆ2 வகுப்புடைய ஜெனரல் மோட்டஸ் இலக்ட்ரிக் லொக்கொமொட்டிவ் என்ஜின்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்தது. 1950 தசாப்தத்தின் நடுப்பகுதியிலே அலுவலக பணியாளர்களுக்கு துரிதமானதும்‚ சுத்தமானதுமானதொரு சேவையினைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஹைட்ரொலிக் வலுகொண்ட புகையிரதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. புகையிரத வரலாற்றில் முக்கிய சந்தர்ப்பமாக அமைவது 1969 ஆம் ஆ்ண்டிலே அனைத்துப் புகையிரத பிரயாணங்களுக்கும் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்தக் கூடிய வகையில் டீசல் ஹைட்ரொலிக் லொக்கொமொட்டிவ் என்ஜின்கள் 82 கொள்வனவு செய்தமையாகும்.

இரண்டு சில்லுகள்‚் இரண்டு கதவுகள் அடங்கலாக 9’6” மற்றும் 22’6’’ நீளமுடைய‚ சூரிய ஔ படாதவாறான பொனட் வகையிலான காற்றோட்டமிக்க கண்ணாடிகள்‚ வெளிச்சத்தை குறைத்துக் கொள்ளக்கூடிய வசதிகள் மற்றும் தேங்காய் எண்ணெய் விளக்குகள் என்பன உள்ளடக்கிய முதலாவது வாகனங்கள் 20 வருடங்களுக்கும் மேலான காலம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. ன்கு சில்லுகளைக் கொண்ட பலகையால் அடைப்புடனான வெகன் வாகனங்களைப் பயன்படுத்தி பண்டங்களைக் கொண்டு செல்வதற்கான புகையிரதப் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
 
     
  சமிக்ஞைகளின் பயன்பாடும்‚ தொலைத் தொடர்பும்  
 
1864 ஆம் ஆண்டு முதலாவது புகையிரதமானது அம்பேபுஸ்ஸ நோக்கிப் பயத்தை ஆரம்பித்தபோது சமிக்ஞைப் பாவனைக்கான தேவையொன் காணப்படவில்லை. புகையிரதமானது அதிக நேரங்களுக்குப் பின்னர் ஒன்றாகவே பயணம் செய்தன. நேரசூசியும் பயணிக்கும் புகையிரதமானது நீண்ட தூரத்தில் பயணிக்கக் கூடிய வகையிலாகும்.

வேகம் அதிகரிக்கப்படல்‚ உடனுக்குடன் புகையிரதங்கள் பயணத்தை ஆரம்பித்தமை என்பன காரணமாக தனிப் பாதைகளில் பயணிக்கும் புகையிரதங்களின் பாதுகாப்பு கருதி டெப்லெட் உபகரணத்தின் பாவனை ஆரம்பிக்கப்பட்டது. இரட்டை பாதைகளையுடைய பிரதேசங்களில் லொக் மற்றும் ப்ளொக் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. லிஸ்ட் மற்றும் மோஸ் முறைமை தனிப் பாதைகளையுடைய புகையிரத நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட முதலாவது இடை பூட்டுக்கள் போடும் முறையாகக் காணப்பட்டது. நிறங்களிலான வெளிச்ச சமிக்ஞை முறைமை மற்றும் மத்திய புகையிரதக் கட்டுப்பாடு என்பன 1959 ஆம் ஆண்டு ஆரம்பமானது. புகையிரத நிலையம் மற்றும் கட்டுப்பாட்டு பெட்டி ஏர்குஃருர்கு என்பவற்றுக்கிடையே வானொலித் தொடர்பு முறைமையை ஆரம்பித்ததன் மூலம் புகையிரத தொலைத் தொடர்பு முறைமை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
 
     
  தொழிற்பாடு  
 
1906 ஆம் ஆண்டிலே புகையிரதத் தொழிற்பாட்டு திணைக்களமானது கொழும்பு‚ அநுராதபுரம் மற்றும் நாவலப்பிட்டி என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்.
 
  Top